search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறித்தவர் கைது"

    • எருமாபாளையத்திலிருந்து சீலநாயக்கன்பட்டிக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் களரம்பட்டி ஆஸ்பத்திரியார் காடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 42), லாரி டிரைவர். இவர் நேற்று எருமாபாளையத்திலிருந்து சீலநாயக்கன்பட்டிக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். இரட்டைக் கோவில் அருகே வந்த போது, அங்கு வந்த சில நபர்கள் பச்சியப்பனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.1100 பணத்தை பறித்தனர்.

    இதைபார்த்து அவர்களை பிடிக்க வந்தவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட, மூணாங்கரடு வி.ஏ.ஓ. ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த கோபி (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் , கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×